அரசு பள்ளிகளில் மதிய உணவு சாப்பிடும் குழந்தைகளின் விவரம் உள்ளிட்ட தகவல்களை இன்று முதல் App (செயலி) மூலமாக பதிவேற்றம் செய்ய தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னதாக வாட்ஸ்ஆப் மூலமாக தகவல்களை பரிமாறி வந்த நிலையில், தற்போது புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த செயலியில் Login உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை சந்திப்பதாக ஆசிரியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.