கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை சுடர் ஏற்றி தொடங்கி வைத்த பிரதமர் மோடி, வணக்கம் சென்னை என தமிழில் பேசி தனது உரையை தொடங்கினார். தமிழ்நாட்டு மக்களின் வரவேற்பும், விருந்தோம்பலும் சொந்த ஊருக்கு வந்த உணர்வை தருகிறது என நெகிழ்ச்சி தெரிவித்த அவர், சாம்பியன்களை உருவாக்கும் பூமி தமிழகம் எனக் கூறினார். மேலும் கேலோ இந்தியா விளையாட்டில் சிலம்பத்தை அறிமுகப்படுத்தியதற்கு அவர் நன்றி தெரிவித்தார்.

மேலும் மெரினா கடற்கரையின் அழகை புகழ்ந்துள்ளார். சென்னை கடற்கரையின் அழகு உங்களை கொள்ளை கொள்ளும் என்பதில் ஐயமில்லை என்றார். மேலும், தமிழ்நாட்டின் கலாச்சாரம் உங்களது வீட்டில் உள்ள உணர்வுகளை அள்ளிக் கொடுக்கும் என நெகிழ்ச்சியுடன் கூறிய அவர், விளையாட்டில் தமிழகத்திற்கென்று தனி ஒரு இடம் உள்ளது என சுட்டிகாட்டினார்.