தமிழகத்தில் திருவாரூர், நாகை, குமரி, தேனி ஆகிய 4 மாவட்டங்களில் இன்று (ஜன.19) முதல் காலி மதுபாட்டில் திரும்பப்பெறும் திட்டம் அமலானது. இதற்காக இப்பகுதியில் விற்கப்படும் மதுபாட்டில்கள் கூடுதலாக ரூ. 10க்கு விற்கப்படும். பின் காலி பாட்டில்களை திரும்ப ஒப்படைக்கும்போது, அத்தொகை திரும்ப வழங்கப்படும். ஏற்கெனவே இத்திட்டம் நீலகிரி, ஏற்காடு போன்ற பகுதிகளில் அமலில் உள்ளது.