பொங்கல் தொடங்கியது முதலே தமிழகம் முழுவதும் பல்வேறு ஊர்களில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. சிவகங்கை மாவட்டம் கண்டுபட்டியில் நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 89 பேர் காயமடைந்துள்ளனர். கோவினிப்பட்டியை சேர்ந்த பூமிநாதன் (56) காளை முட்டியதில் உயிரிழந்தார். மேலும், இதில் காயமடைந்த 89 பேர் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகின்றனர்.