சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், சிராவயல் ஊராட்சியில் கடந்த 17ம் தேதி மஞ்சுவிரட்டுப் போட்டி நடைபெறும் இடத்திற்கு வெளியே காளை முட்டி சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த மணிமுத்து (35) மற்றும் 11 வயது சிறுவன் பாஸ்கரன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்கள். இதனையடுத்து அவர்களது குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின் , இறந்தவர்கள் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.3 லட்சம் வழங்க உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் பாஸ்கரன், மணிமுத்து (35) குடும்பத்தினரிடம் ரூ.3 லட்சத்துக்கான காசோலையை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார். 2 பேரின் குடும்பத்துக்கும் தனது சார்பிலும் தலா ரூ.1 லட்சம் நிதியை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.