கடந்த டிசம்பரில் மிக்ஜாம் புயல் மற்றும் மழை காரணமாக பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டன. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக நாளை (20.01.2024) சென்னை, திருவள்ளூரில் பள்ளிகள் செயல்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதேபோல், திண்டுக்கல்லில் வருகை நாட்களை ஈடு செய்யும் விதமாக, 1 முதல் 12ஆம் வகுப்பு வரை, நாளை பள்ளிகள் செயல்படும் என அம்மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.