சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பங்களிப்பை வழங்கி வரும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பசுமை சாம்பியன் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுக்கு தேர்வாகும் 100 பேருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்படும். இதற்கு விருப்பமுள்ளவர்கள் www.tnpcb.gov. என்ற மாசு கட்டுப்பாட்டு வாரிய இணையதளத்தில் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்ற தமிழக அரசு தெரிவித்துள்ளது