SETC பேருந்துகளில் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டது வெளியான தகவலில் உண்மை இல்லை என்று போக்குவரத்து அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். கோயம்பேடுக்கு பதிலாக தற்போது கிளாம்பாக்கத்தில் இருந்து SETC  பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால் பல்வேறு வழித்தடங்களில் கட்டணம் மறு நிர்ணயம் மட்டுமே செய்துள்ளதாக குறிப்பிட்ட அதிகாரிகள் வழக்கமான கட்டணம் தற்போது வசூலிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.