பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று முதல் முறையாக பட்ஜெட் தாக்கல் செய்கிறார். சுமார் 1.30 மணி நேரம் பட்ஜெட் உரையை அவர் வாசிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமூக நீதி, கடைக்கோடி மனிதருக்கும் நலவாழ்வு, அறிவுசார் பொருளாதாரம் உட்பட 7 மாபெரும் தமிழ் கனவு’ என்ற தலைப்பின் கீழ் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி வரும் நிலையில், 79 லட்சம் பெண்கள் பயன்பெறும் 100 நாள் வேலைத் திட்டத்திற்கு ரூ.3,300 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

நிதி அயோக் புள்ளி விவரங்களின் படி தமிழகத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் 2.2% பேர் மட்டுமே உள்ளதாக கூறிய அவர்,5 லட்சம் ஏழை குடும்பங்களை கண்டறிந்து வறுமையை அகற்றிட முதல்வரின் தாயுமானவர் வறுமை ஒழிப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.