ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரி கொலை செய்தியை வாட்ஸ் அப்பில் பார்த்து Thumbs Up குறியீட்டை ரிப்ளை ஆக அனுப்பிய காவலரை பணிநீக்கம் செய்ய தேவையில்லை. இந்த குறியீடு என்பது ஓகே என்பதன் மாற்று குறியீடே தவிர அது அதிகாரியின் கொலையை கொண்டாடுவதற்கான குறியீடாக கருத முடியாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. RPF காவலர் மீது தொடரப்பட்ட வழக்கில் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.