தமிழக அரசு சார்பாக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் நோக்கத்தில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதனைத் தொடர்ந்து தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் மூலமாக சிறப்பு பயிற்சி வழங்கப்படுகின்றது.

இளைஞர்கள் சொந்தமாக தொழில் தொடங்குவதற்கு வசதியாக சென்னையில் மூன்று நாட்களுக்கு பேக்கரி பொருட்கள் தயாரித்தல் பயிற்சி வழங்கப்படுகின்றது. இந்த பயிற்சி மார்ச் 14 இன்று முதல் மார்ச் 15ஆம் தேதி வரை காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை வழங்கப்படுகின்றது. இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு என்ற இணையதள பக்கத்தை அணுகலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.