தேர்தல் ஆணையத்திடம் இருந்து கரும்பு விவசாயி சின்னத்தைப் பெற்ற பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி, தமிழகம் மற்றும் புதுவையில் 40 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது. அந்த சின்னத்தை நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என்று கேட்டு உச்சநீதி மன்றம் வரை போராடிக் கொண்டிருக்கிறார் சீமான். இந்நிலையில் பாமஐக-வின் அறிவிப்பு நாதகவினர் தலையில் இடியாக வந்து இறங்கியிருக்கிறது.