“தாய்மார்களுக்கு ரூபாய் ஆயிரம் பிச்சைப் போட்டால் அவர்கள் திமுகவுக்கு வாக்களிப்பார்களா?” என பாஜக சார்பில் நடைபெற்ற போதைப் பொருள் ஒழிப்பு ஆர்ப்பாட்டத்தில் நடிகை குஷ்பு கூறியிருந்தார். இதனை எதிர்த்து திமுக மகளிர் அணி சார்பில் பல்வேறு போராட்டங்க நடத்தப்பட்டன. இந்நிலையில் யார் என்ன உதவி செய்கிறார்கள் என்பது முக்கியம் இல்லை.

ஒருவர் மக்களுக்கு எதேனும் ஒரு உதவியைச் செய்கிறார்கள் என்றால் அது மக்களுக்கு கட்டாயம் பயனுள்ளது எனில் அதனை பாராட்டவேண்டும். உங்களால் அதனை பாராட்ட முடியவில்லை என்றால் தயவு செய்து அது குறித்து இழிவா பேசாதீங்க. 5 ரூபாய்க்கு ஒரு உதவி செய்தால் கூட அதனை பிச்சை எனக் கூறுவது எப்படி சரியாகும்?” என நடிகை அம்பிகா எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.