உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் சித்திரை திருவிழா வரும் ஏப்ரல் 11ம் தேதியிலிருந்து தொடங்குகிறது. ஏப்ரல் 12ம் தேதி கொடியேற்றப்பட்டு, 21 ம் தேதி மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெறும். ஏப்ரல் 23 ம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வோடு சித்திரைத் திருவிழா நிறைவடைகிறது.

லட்சக்கணக்கான பக்தர்கள் திருவிழாவின்போது கலந்துகொள்வார்கள் என்பதால் பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்கூட்டியே நடைமுறைப்படுத்த ஏற்பாடு செய்யப்படுகிறது.