வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கட்சிக்கு வாக்களிப்பவர்கள் நாட்டிற்கு அழிவு மட்டும் தான் கொண்டு வருவார்கள் என பீகார் மாநில முதல்வர் விமர்சித்துள்ளார்.

பீகார் மாநிலத்தின் முதல்வர் நிதீஷ் குமார். இவர் அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு தொண்டர்களிடம் பேசினார். அவர் பேசியதாவது, வருகின்ற 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கட்சிக்கு வாக்களிப்பவர்கள் நாட்டுக்கு அழிவை தான் கொண்டு வருவார்கள்.

அதன் பிறகு நாட்டின் விடுதலைக்கு பாஜக கட்சி எந்த விதத்திலும் பங்காற்றவில்லை. அவர்கள் மக்கள் மத்தியிலும் நாடு முழுவதும் வெறுப்பை மட்டுமே பரப்ப முயற்சி செய்கிறார்கள். நாடு முழுவதும் அவர்கள் அழிக்கப்பட வேண்டும் என காட்டமாக கூறினார்.