பிரதமர் மோடி சுமார் 5000 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக 2 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார். நேற்று சென்னைக்கு வந்த பிரதமர் மோடியை சந்திப்பதற்கு எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனியாக நேரம் கேட்டிருந்தனர். ஆனால் இருவரையுமே பிரதமர் மோடி சந்திக்காமல் கிளம்பி சென்று விட்டார். இதனால் பாஜக மற்றும் அதிமுக இடையே சலசலப்புகள் நிலவுவதாக தகவல்கள் பரவியது.

இந்நிலையில் பிரதமர் மோடி எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்காததன் காரணம் குறித்து தற்போது முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் கொடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, போதிய நேரமின்மை காரணமாக மட்டுமே பிரதமர் மோடி எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்கவில்லை. அதிமுக மற்றும் பாஜகவுக்கு இடையில் எந்தவித முரண்பாடும் கிடையாது என்று கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். ஆனால் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இணைந்து செயல்படுவதை பாஜக விரும்புவதால்தான் அவர்களை சந்திக்க பிரதமர் மோடி விரும்பவில்லை என தகவல் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.