தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் தேவயானி. இவர் இயக்குனர் ராஜகுமாரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது இரு மகள்கள் இருக்கிறார்கள். நடிகை தேவயானி தற்போது படங்களில் குணச்சித்திர வேடங்கள் மற்றும் சீரியல்களில் நடித்து வருகிறார். நடிகை தேவயானி சினிமாவில் உச்சத்தில் இருந்த போது இயக்குனர் ராஜகுமாரை காதலித்து கடந்த 2001-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். தேவயானியின் காதலுக்கு பெற்றோர் சம்மதம் தெரிவிக்காததால் அவர்களின் எதிர்ப்பை மீறிதான் ராஜகுமாரை தேவயானி கரம் பிடித்தார்.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் இயக்குனர் ராஜகுமார் மீது காதல் வந்தது குறித்து தேவயானி மனம் திறந்து பேசியுள்ளார். அதாவது இயக்குனர் ராஜகுமார் இயக்கத்தில் நீ வருவாய் என படத்தில் நடித்துக் கொண்டிருந்த போதே தேவயானிக்கு அவர் மீது காதல் வந்துள்ளது. இந்த படத்திற்கு பிறகு விண்ணுக்கும் மண்ணுக்கும் என்ற படத்தை ராஜகுமார் இயக்கியுள்ளார். அந்த படப்பிடிப்பின் போது ராஜகுமாரின் அன்பு, அமைதி, உழைப்பு ஆகியவற்றை பார்த்து தேவயானிக்கு அதிக காதல் ஏற்பட்டுள்ளது. ராஜகுமார் தன்னை நன்றாக பார்த்துக் கொள்வார் என்று தனக்கு தோன்றியதால் தான் வீட்டை எதிர்த்து அவரை திருமணம் செய்து கொண்டதாக கூறியுள்ளார்.