யாரடி நீ மோகினி திரைப்படத்தின் வாயிலாக கவனம் பெற்றவர் இயக்குநர் மித்ரன் ஆர்.ஜவஹர். இவருடைய இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரியா பவானிசங்கர் கதாநாயகிகளாக நடித்தார்கள். அதோடு பாரதிராஜா, பிரகாஷ் ராஜ் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்த இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

நீண்ட இடைவேளைக்கு பின் தனுஷ்-அனிருத் இணைந்து பணியாற்றியது திருச்சிற்றம்பலம் படத்துக்கு கூடுதல் பலமாக அமைந்திருந்தது. மேலும் திருச்சிற்றம்பலம் ரூபாய்.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இயக்குநர் மித்ரன் ஆர்.ஜவஹரின் புது படமான “அரியவன்” திரைப்படத்தின் டிரைலரை படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர். அறிமுக நாயகன் ஈஷான் நடிக்கும் இப்படத்தின் கதையை மாரிசெல்வன் எழுதி உள்ளார். இந்த டிரைலர் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.