மத்தியப்பிரதேசம் கட்னியில் வசித்து வரும் 17 வயது சிறுமி 5 மாதங்களுக்கு முன் கடத்தி செல்லப்பட்டார். திருமணத்துக்காக சிறுமி 2 முறை விற்பனை செய்யபட்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட அச்சிறுமி, பிறகு தன் 2-வது கணவரின் வீட்டில் இருந்து தப்பிச்சென்றுள்ளார்.

திங்கள்கிழமை அன்று கோட்டா பகுதியில் ரயில்வே காவல்துறை (ஜிஆர்பி) பணியாளர்களால் அச்சிறுமி மீட்கப்பட்டார். அதன்பின் அந்த சிறுமி குழந்தைகள் நலக் குழுவில் ஒப்படைக்கப்பட்டார். அதனை தொடர்ந்து சிறுமியின் பெற்றோருக்கும், உள்ளூர் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சிறுமியை விற்பனை செய்ததாக 3 ஆண்கள் மற்றும் 1 பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.