ADMK கழக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு ஆலோசனை கூட்டம் Ops தலைமையில் நடைபெற்றது. இதில் பேசிய மாவட்ட கழக செயலாளர் அம்பிகாபதி,

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நோக்கமே…. ஐயா அவர்கள் எதிர்காலத்தில் வெற்றி பெறனும். துரோகங்களை செய்து எடப்பாடி அவர்களுக்கு ஒரு கண்டனம் தெரிவிக்கின்ற  வகையில் தான் இந்த மாபெரும் கூட்டம்  கூடி  இருக்கின்றது.  சென்னையில் இருக்கின்ற அனைத்து தொகுதிகளிலும் பாராளுமன்றத் தேர்தல் வெற்றிப் பெற்று காண்பிப்போம் என்று கூடுகின்ற கூட்டமாக தான் இந்தக் கூட்டம் இருக்கிறது என்று ஐயா அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆகையால் சென்னையில் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் ஐயா யாருடன் கூட்டணி வைக்கிறார்களோ, அந்த கூட்டணி தான் வெற்றிப் பெறும். அப்படிப்பட்ட வெற்றிக்கு  நாங்கள் களப்பணி ஆற்ற வேண்டும். இந்த கூட்டத்தின் வாயிலாக நாங்கள் ஒவ்வொருவருக்கும் சொல்வது என்னவென்றால் ? ஐயா அவர்கள் ஒவ்வொருவரும் சொல்வார்கள்.

பூத் கமிட்டி அமையுங்கள் என்று…. இந்த கூட்டத்தின் வாயிலாக ஒவ்வொருவருக்கும் நான் சொல்வது  இன்றிலிருந்து வேலை செய்து இந்த பாராளுமன்ற தேர்தலில்…. எதிர்கோஷ்டியில் உள்ளவர்கள் மண்ணை கவ்வ வேண்டும். ஆகவே வருகின்ற காலம் நமது  காலம். 2026 ஆம் ஆண்டு ஐயா  ஓபிஎஸ் அவர்கள் தான் முதல்வர் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொண்டு, அம்மா அடையாளம் காட்டியதே OPS அவர்கள் தான் என்று இந்த நேரத்தில் கூறி விடைபெறுகிறேன் என தெரிவித்தார்.