செய்தியாளர்களிடம் பேசிய ஈரோடு தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான இ.வி.எஸ். இளங்கோவன், தமிழ்நாடு காங்கிரஸில் என்ன நடக்கிறது என்று எனக்கு தெரியவில்லை இது போன்ற கூட்டங்கள் என்று சொன்னால் எங்களை போன்றவர்களையெல்லாம் கூப்பிடுவது வழக்கம்.

இன்றைக்கு யாரையும் கூப்பிடாமெலாம் கூட்டத்தை நடத்தி இருக்கின்றார்கள் என்ன மர்மமான கூட்டமோ என்று எனக்கு தெரியவில்லை என்ன நடந்தது என்பதை விசாரித்து நான் சொல்கிறேன். எனக்கு ஒண்ணுமே தெரியல. கூட்டம் எனக்கு தெரியாது. பேப்பர்  பார்த்து தான் தெரிந்து கொண்டேன்.

எனக்கும் தெரியாது,  தங்கபாலுக்கும்  தெரியாது, திருநாவுக்கரசுக்கும் தெரியாது.  புறக்கணிக்கப்படுகிறார்கள் என்று சொல்லவில்லை. முதல்ல முன்னாள் தலைவர்கள் என  சொன்னாங்க…. அப்புறம் மூத்த தலைவர் என சொன்னார்கள்…  இப்ப முடிஞ்சு போன தலைவர்கள்ன்னு சொல்றாங்க அவ்வளவுதான் என பேசினார்.