அதிமுக மதுரை மாநாட்டில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, இந்த மீனாட்சி பட்டணத்திற்கு பல பெருமை உண்டு. 1973ஆம் ஆண்டு 5ஆம் தேதி ஜனவரி மாதம் மனிதப் புனிதன் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் மதுரைக்கு வந்தார். இதே திருப்பரங்குன்றத்திற்கு வந்தார். வந்த புகைவண்டி 10 மணி நேரம் காலதாமதம். நம்முடைய மகாத்மா காந்தி அவர்கள் வரும்போது ஆறு மணி நேரம் தான் தாமதம். அதே மாதிரி நம் தலைவர்,  புரட்சித்தலைவர் 16 லட்சம் தொண்டர்களைக் கொண்டு திமுகவை வனவாசம் போக வைத்தார்.

நம் தாய் தங்கத் தலைவி,  புரட்சித்தலைவி அம்மா அவர்கள்…. நம்முடைய தலைமை கழக கொறடா…  தலைமை நிலைய செயலாளர்.. கொங்கு மண்டலத்தின் உடைய சிங்கமாக விளங்குகின்ற கொங்கு தளபதி…  அருமை தம்பி வேலுமணி அவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தால்  திருச்சி மாநகர் குலுங்கியது, மதுரை திணறியது. 2010ல் நடந்த ஆர்ப்பாட்டம்…  10 ஆண்டுகள் திமுகவை  வனவாசம் போக வைத்தவர் புரட்சித்தலைவர் அம்மா.

புரட்சித்தலைவி அம்மா திமுக என்ற தீய சக்தியை தமிழ்நாட்டில் இருந்து விரட்டினார் அம்மா அவர்கள். அன்றைக்கு ஒன்றை கோடி தொண்டர்கள். இன்றைக்கு 2023 ரெண்டு கோடியே 44 லட்சம் தொண்டர்கள். இதே மதுரையில் அண்ணன் உரை வீர உரை நிகழ்த்த இருக்கின்றார்.

அண்ணன் அவர்களே… நான் அறுதியிட்டு, உறுதியிட்டு…  இந்த மண்ணின் சார்பாக…  மீனாட்சி மைந்தனாக காட்சியளிக்கின்ற நீங்கள் இனி இந்த திராவிட முன்னேற்றக் கழகம் தீய சக்தியை  ஒழிக்க போகிற ஒரே ஆறுமுகசாமி…  நம்முடைய பழனிச்சாமி என்பதை இதே நேரத்தில் தெரிவித்து கொள்கின்றேன்.  நல்லாட்சி கொடுங்கள்… இனிமேல் வாலறிந்த நரியாக திராவிட முன்னேற்றக் கழகம் இருக்கணும் என தெரிவித்தார்.