ஓசூர் மாநகரப் பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்குள் 52 இருசக்கர வாகனங்களைத் திருடி விற்பனை செய்த திருடனை காவல்துறையினர்  வெற்றிகரமாக விசாரணை நடத்தி கைது செய்தனர். கடைத்தெரு பகுதிகளில் தொடர் திருட்டு சம்பவம் தொடர்பாக எழுந்த  புகார்கள், அடிப்படையில் சிசிடிவி காட்சிகளை முழுமையாக ஆய்வு செய்ததில்,

குற்றங்களில் தனிநபர் ஒருவர் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. அதன்படி, தர்மபுரி மாவட்டம், ஜிடந்தஅள்ளியைச் சேர்ந்த கண்ணன் என்பவர் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில்,

ஓசூர் நகர பகுதிகளில், கண்ணன், அதிக விலை கொண்ட இருசக்கர வாகனங்களை திருடி விற்றது தெரியவந்தது. ஓசூர் காவல்துறை அதிகாரிகளின் துரித நடவடிக்கையால் கண்ணன் கைது செய்யப்பட்டு, அவர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.