மூன்றாம் பாலின தம்பதி ஷகத் மற்றும் தியா. இவர்கள் கோலிக்கோடு பகுதியைச் சேர்ந்தவர்கள். இதில் ஷகத் பெண்ணாக பிறந்து ஆணாக மாறினார். அதேபோல தீயா ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறினார். தியா ஒரு நடன கலைஞர். ஷகத் தனியார் நிறுவனத்தில் கணக்காளராக வேலை செய்து வருகின்றார். இருவரும் ஒரு குழந்தையை தத்தெடுக்க முயன்றுள்ளனர்.

இருப்பினும் இருவரும் மூன்றாம் பாலினத்தவராக இருந்தால் சட்ட ரீதியாக அவர்களுக்கு பலச் சிக்கல்கள் எழுந்துள்ளன. அதன்பின் ஷகத் ஆணாக மாறி இருந்தாலும் கூட அவரால் கருத்தரிக்க முடியும் என்பதை அறிந்த மருத்துவரை அணுகியுள்ளார். பெண்ணாக மாறிய தியா மூலம் ஷகத் கருவுற்றார். பாலின மாற்று அறுவை சிகிச்சையில் ஷகத்தின் மார்பகங்கள் அகற்றப்பட்ட போதிலும் கருப்பை உள்ளிட்ட உறுப்புகள் அகற்றப்படாமல் இருந்தது.

இதன் காரணமாகவே அவரால் கர்ப்பமாக முடிந்துள்ளது. இதனிடையே 8 மாத கர்ப்பத்தில் இருக்கும் ஷகத் ஜோடி போட்டோ சூட் ஒன்றினை நடத்தி வெளியிட்டுள்ளனர். குழந்தை பிறந்த பிறகு தாய்ப்பால் வங்கியில் இருந்து தாய்ப்பால் வாங்கி குழந்தைக்கு தர முடிவு செய்துள்ளனர் என கூறப்படுகின்றது. இந்த தகவலை கேட்ட இணையதள வாசிகள் அவர்களுக்கு வாழ்த்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.