தமிழக முதல்வர் ஸ்டாலின் உங்களில் ஒருவன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ஆளுநரின் செயல்பாடுகளை பார்த்தால் அவருக்கு வாய் மட்டும்தான் உண்டு. காதுகள் இல்லை என்பது தெரிகிறது. அதன்பிறகு டெல்லியின் துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவின் கைது கண்டனத்திற்குரியது. தேர்தல் மூலமாக மட்டும்தான் எதிர்க்கட்சியை வெல்ல முடியும். விசாரணை ஆணையத்தின் மூலமாக அல்ல என்று கூறினார்.

மேலும் தமிழக அரசு அனுப்பும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போட்டுள்ளதால்ஆளுநர் மீது பல்வேறு விதமான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது. குறிப்பாக ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்திற்கான மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காதது அரசியல் கட்சி தலைவர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஆளுநரின்  செயல் பாடுகளுக்கு அவர்கள் கண்டனங்களையும் தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.