பாஜக ஆட்சியால் இந்தியாவிற்கு 3 மடங்கு கடன் அதிகரித்து இருப்பதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உங்களில் ஒருவன் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று பேசியதாவது “கடந்த 2014 ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்தபோது பெட்ரோல் விலை ரூ.72.26 ஆக இருந்தது. அது தற்போது ரூ.102.63 ஆக உள்ளது.

அதேபோன்று 2014 ஆம் வருடம் மத்திய அரசுக்கு இருந்த கடன் ரூபாய்.54 லட்சம் கோடி. ஆனால் தற்போது ரூபாய்.147 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இதுதான் பாஜகவால் இந்தியா அடைந்த வளர்ச்சி என்று விமர்சித்துள்ளார்.