கர்நாடக மாநிலம் பிதர் நகரில் எஸ்பிஐ ஏடிஎம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு ஏடிஎம்மில் பணம் இருப்பதற்காக வங்கி ஊழியர்கள் வேனில் பணத்துடன் வந்துள்ளனர். இதையடுத்து அவர்கள் வேனில் இருந்த பணப்பெட்டியை இறக்கிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த கொள்ளையர்கள் வங்கி ஊழியர்களை பார்த்து துப்பாக்கியால் சுட்டனர். இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மற்றொருவர் படுகாயமடைந்தார். இதையடுத்து அந்த கொள்ளையர்கள் அந்த பணப்பெட்டியை எடுத்து சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையர்கள் யார் என்பதை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.