
நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் பகுதி அருகே கொட்டாரக்குறிச்சி பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் சிலர் கொலை முயற்சி, அடிதடி, மோசடி மற்றும் வழிப்பறி போன்றவற்றில் ஈடுபட்டு வருவதாக அப்பகுதி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் பொதுமக்களிடம் மோசடி, வழிப்பறி,அடிதடியில் ஈடுபட்டது சங்கர் கணேஷ், மகாராஜன் என்பது தெரிய வந்தது.
இந்நிலையில் அவர்கள் இருவர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வீரவநல்லூர் இன்ஸ்பெக்டர் மாவட்ட எஸ்பி யிடம் வேண்டுகோள் வைத்தார். அதன் படி எஸ் பி சிலம்பரசன், மாவட்ட ஆட்சியரிடம் ஓப்புதல் வழங்கிய நிலையில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து கொட்டாரக்குறிச்சி பகுதியை சேர்ந்த சங்கர் கணேஷ் மற்றும் மகாராஜன் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைக்கு பின் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.