செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, மேற்கு வங்கத்தில் பிஜேபி கேண்டிடேட் பெண்ணை,  நிர்வாணப்படுத்தி திரிணமூல் குண்டர்கள், அந்தப் பெண்ணை கற்பழித்து இருக்கிறார்கள். இதை யாராவது கண்டிச்சாங்களா ? அதை கண்டிக்கவில்லை என்றால்..? இதை கண்டிக்காதீங்க என தமிழகத்தில் மணிப்பூர் சம்பவத்திற்கு கண்டித்தவர்களிடம்  கேட்டுக்கொண்டார்.

உடனே பத்திரிக்கையாளர்கள்: அப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை என்று மேற்குவங்க டிஜிபி  உண்மையறியும் குழுவை பிஜேபி ஆட்களுடன் சேர்த்து அனுப்பி சொல்லி இருக்கார் என்று பதில் சொன்ன உடன்,

அப்படித்தான் நிறைய பேர் சொல்றாங்க. அப்படி நடந்து இருக்கு. எங்க அகில இந்திய மகளிர் அணி தலைவி இதை பற்றி விவரமாக பத்திரிகைக்கு செய்தி  கொடுத்து இருக்காங்க என பதில் அளித்தார். மணிப்பூரில் ஊடுருவல் நடந்திருக்கு என்று சொல்லவில்லை. இங்கே வருகின்றவன் அடிக்கடி அங்க குதிக்கிறான். எல்லை பகுதியின் எல்லா இடத்துலயும் லைனா ஆளு இருந்தாலும், சில சமயத்துல ஊடுருவல் நடக்கும். நடந்தவுடனே, அதுக்கு பிறகு நடவடிக்கை எடுப்பாங்க என கூறினார்.