தமிழக அரசு மாணவர்களுடைய நலனைக் கருத்தில்  கொண்டு அவர்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தற்போது  வளரிளம் பருவத்தினர் பெருந்தொற்று காலத்தில்  ரீதியாக பல்வேறு பிரச்சினை எதிர்கொள்கிறார்கள். அதனை ஈடு செய்வதற்காக அவர்களுடைய சமூக மனவெழுச்சி நலனை மேம்படுத்துவதற்காகவும், நேர்மறை எண்ணங்களை உருவாக்கவும் மகிழ்ச்சியாக கற்றலில் ஈடுபடுவதற்கு ஏதுவாக தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் ஒன்பது முதல் 12 ஆம் வகுப்பு  மாணவர்களுக்கு மனநலம் மற்றும் வாழ்வியல் திறன் பயிற்சிகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி தமிழ்நாட்டில் உள்ள 44 கல்வியில் பின்தங்கிய வட்டாரங்களில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஒன்பது முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இந்த பயிற்சி வழங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.