அபுதாபியில் இருந்து மும்பை சென்ற விமானத்தில் இத்தாலிய பெண் ஒருவர் பணியாளரை கத்தியால் குத்திய சம்பவம் நிகழ்ந்துள்ளது. இத்தாலியைச் சேர்ந்த பாவ்லா பெருசியோ என்ற பெண் விமானத்தில் மது குடித்துவிட்டு பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் சாதாரண விமான பயணச்சீட்டை வைத்துக்கொண்டு தனக்கு உயர்தர பயணம் செய்திற்கான இருக்கையை தருமாறு பணியாளர்களை வற்புறுத்தியுள்ளார்.

பணியாளர்கள் தர மறுத்ததை அடுத்து இத்தாலிய பெண் பணியாளர் ஒருவரின் மீது கத்தியால் குத்தியுள்ளார். மற்றொருவர் மீது எச்சில் துப்பி அரைகுறை ஆடையுடன் சாதாரணமாக அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தார். விமானம் மும்பையில் தரை இறங்கியவுடன் விமான பணிக்குழுவினர் அந்த பெண் மீது புகார் அளித்தனர். அவர்கள் அளித்த புகாரை தொடர்ந்து இத்தாலிய பெண்ணை மும்பை காவல் துறையினர் கைது செய்தனர்.