புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மேலபட்டு கிராமத்தில் முபாரக் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் அலாவுதீன் ஒரு கடையில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அலாவுதீன் அறந்தாங்கி பேருந்து நிலையத்தில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கஞ்சா விற்பனை செய்த அலாவுதீனை சுற்றி வளைத்து கைது செய்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அலாவுதீனை கைது செய்து, அவரிடம் இருந்த 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.