கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பெருவிளை சாமி தெருவில் தாசன்(73) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சாந்தி என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் முதியவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முதியவரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தாசனுக்கு தோல் சம்மந்தமான நோய் இருந்துள்ளது. இதனால் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று அவர் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனாலும் நோய் குணமாகாததால் மன உளைச்சலில் தாசன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.