கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வெள்ளையன்தோப்பு பகுதியில் சுபாஷ் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2021-ஆம் ஆண்டு சுபாஷுக்கு நெல்லையை சேர்ந்த லட்சுமி பிரியா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்தின் போது பெண் வீட்டார் 1 1/2 லட்ச ரூபாய் பணம், 10 பவுன் தங்க நகைகள், 93 ஆயிரம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்களை வரதட்சணையாக கொடுத்துள்ளனர்.

இந்நிலையில் சுபாஷின் குடும்பத்தினர் கூடுதல் வரதட்சனை கேட்டு லட்சுமி பிரியாவை அடித்து துன்புறுத்தியதாக தெரிகிறது. இதுகுறித்து லட்சுமி பிரியா கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் சுபாஷ், அவரது தந்தை செல்வ தாஸ், தாய் ஜானகி, உறவினர்களான தேவிகா, கண்ணன், மதன், கௌரி ஆகிய 7 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.