இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் தன்னுடைய ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதன்படி தங்களின் ஊழியர்களைபல்வேறு நிறுவனங்களும் பணி நீக்கம் செய்து வரும் நிலையில் டிசிஎஸ் நிறுவனம் தனது ஊழியர்களை இனி பணி நீக்கம் செய்யப் போவதில்லை என்று அறிவித்துள்ளது. ஒருமுறை ஊழியர்களை பணியமர்த்திய பிறகு பணிநீக்கம் செய்யும் நடவடிக்கைக்கு இனி இடம் இல்லை.

ஒருவேளை ஊழியர்களின் செயல்பாடுகள் ஏதாவது சரியில்லை என்றால் அவர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்படும். தேவைக்கு அதிகமாக ஆட்களை வேலைக்கு அமர்த்துவதால் மற்ற நிறுவனங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசிஎஸ் நிறுவனத்தின் இந்த நடவடிக்கை ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.