துருக்கி – சிரியா எல்லை பகுதியில் 2 கிமீ ஆழத்திற்கு மீண்டும் ஒரு பயங்கர நிலநடுக்கம்  ஏற்பட்டதால், மக்கள் கடும் அச்சத்தில்  உள்ளனர். இது ரிக்டர் அளவுகோலில் 6.3ஆக பதிவாகியுள்ளது. இந்ந நிலநடுக்கத்தை தொடர்ந்து அடுத்த சில மணி நேரங்களில் துருக்கியின் ஹடாய் மாகாணத்தில் 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த இரண்டு நிலநடுக்கங்களால் 3 பேர் பலியாகியுள்ளதுடன், 213 பேர்காயமடைந்துள்ளனர்.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பாக இதே பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டு 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களை காவு வாங்கியது. மேலும் ஏராளமானவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.