திருநெல்வேலியில் நீர்காத்த லிங்கம் என்ற இளைஞர் வசித்து வருகிறார். இவர் கடந்த மாதம் குடித்துவிட்டு வாகனத்தில் சென்ற போது திடீரென விபத்து ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து நீர்க்காத்த லிங்கத்தை கைது செய்துள்ளனர். இவரை காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியுள்ளனர்.

இந்த வழக்கில் மாவட்ட நீதிமன்றம் தற்போது ஒரு வித்தியாசமான தீர்ப்பை வழங்கியுள்ளது. அதாவது தினமும் இரவு 12 மணிக்கு நெல்லை டவுன் அருகே உள்ள டாஸ்மாக் கடையை நீர்காத்தலிங்கம் தினமும் சுத்தம் செய்ய வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டு நிபந்தனை அடிப்படையில் அவருக்கு ஜாமீன் வழங்கியுள்ளது. மேலும் மறு உத்தரவு வரும் வரை கட்டாயமாக இதை நீர்க்காத லிங்கம் பின்பற்ற வேண்டும் எனவும் நீதிபதிகள் வலியுறுத்தியுள்ளனர்.