குழந்தை திருமணத்துக்கு அனுமதித்தால் 2 ஆண்டு சிறை .திருவாரூர் மாவட்டத்தில் குழந்தை திருமணம் நடத்த அனுமதித்தால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் என்று ஆட்சியர் சாரு ஸ்ரீ எச்சரித்துள்ளார். 18 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு திருமணம் நடத்துவது சட்டப்படி குற்றமாகும். இதுபோன்ற திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

கோயில் செயல் அலுவலர்கள், திருமண மண்டப உரிமையாளர்கள் ஆகியோர் திருமணம் செய்ய வருபவர்களிடம் மணமகன், மணமகள் ஆகியோரின் வயது சான்றை அவசியம் பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளார். குழந்தை திருமணத்தை ஒழிக்க தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.