மாடு முழு விவசாயிகளுக்கு மத்திய மற்றும் மாநில அரசு சார்பாக பிரதம மந்திரி பஸல் பீமா யோஜனா திட்டம் மூலம் காப்பீடு வழங்கப்படுகிறது. நடப்பாண்டில் திருவாரூர், மயிலாடுதுறை, வேலூர், தஞ்சாவூர், ஈரோடு, கன்னியாகுமரி, நாமக்கல், செங்கல்பட்டு, ராமநாதபுரம்,திருவண்ணாமலை மற்றும் திண்டுக்கல் ஆகிய 11 மாவட்டங்களில் உள்ள விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு வழங்கப்பட உள்ளது. இந்த மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் செலுத்த வேண்டிய பிரீமியம் தொகையாக உணவு தானிய பயிர் மற்றும் எண்ணெய் வித்து பயிர்களுக்கு 1.5%, தோட்டக்கலை பயிர்கள் மற்றும் பண பயிர்களுக்கு 5% செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் மூலமாக நெல், நெல் தரிசு பருத்தி, எள், கரும்பு, பருத்தி 3 ஆகிய பயிர்களுக்கு காப்பீடு செய்யப்படும். இந்த திட்டத்தில் சிற விவசாயிகள் வேளாண்மை கூட்டுறவு வங்கி தேசிய மயமாகப் பட்ட வங்கி மற்றும் பொது சேவை மையத்தில் வேண்டிய ஆவணங்களை சமர்ப்பித்து பிறகு செலுத்த வேண்டிய பிரிமியம் தொகையை செலுத்தி சேர்ந்து கொள்ளலாம். விவசாயிகளுக்கு மின்னணு பரிமாற்ற சேவை உள்ள ஆதார எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு இருப்பது அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயிர் காப்பீடு செய்வதற்கு கடைசி நாள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி திருவாரூர் மாவட்டத்திற்கு ( நெல் III, எள்) 15.03.2023, (நெல் தரிசு பருத்தி, கரும்பு)31.03.2023, வேலூர் மாவட்டத்திற்கு (கரும்பு ) 31.03.2023, மயிலாடுதுறை நெல் III 15.03.2023, பருத்தி III, நெல் தரிசு பருத்தி, கரும்பு 31.03.2023, ஈரோடு மாவட்டத்திற்கு கரும்பு 31.03.2023, தஞ்சாவூர் III, நாமக்கல் மாவட்டத்திற்கு 15.03.2023, செங்கல்பட்டு மாவட்டத்திற்கு 31.03.2023, திருவண்ணாமலை, திண்டுக்கல் மாவட்டத்திற்கு 31.03.2023 ஆகிய தேதிகளில் விண்ணப்பிக்க வேண்டும்.