கோயம்புத்தூரில் கொலை வழக்கில் சரணடைந்த குற்றவாளி சஞ்சய் ராஜா என்பவர் விசாரணையில் இருந்து தப்பிப்பதற்காக துப்பாக்கியை வைத்து போலீசாரை நோக்கி சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் காவல் ஆய்வாளர் கிருஷ்ண லீலா மீது குண்டு படாததால் காயமின்றி தப்பினார். இதன் காரணமாக உடன் இருந்த உதவி காவல் ஆய்வாளர் சந்திரசேகர் குற்றவாளியை நோக்கி துப்பாக்கியை எடுத்து சுட்டார். இதில் குற்றவாளி சஞ்சீவி ராஜாவின் காலில் காயம் ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.