சென்னையில் தனியார் பேருந்துகளை இயக்குவதற்கு தற்போது தொமுச, சிஐடியு உள்ளிட்ட 9 தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சென்னையில் தனியார் பேருந்துகளை இயக்கக் கூடாது என தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் தொழிற்சங்கங்கள் கடிதம் வழங்க முடிவு செய்துள்ளது. இந்நிலையில் சென்னையில் தனியார் பேருந்துகளை இயக்குவதற்கான டெண்டர் விடப்பட்டதாக தகவல்கள் வந்த நிலையில் அமைச்சர் சிவசங்கர் சென்னையில் தனியார் பேருந்துகளை இயக்குவதற்கான சாதக பாதகங்களை தெரிந்து கொள்வதற்காகவே டெண்டர் விடப்பட்டது என்றும், போக்குவரத்து துறையை தனியார் வசம் ஒப்படைப்பதற்கான பேச்சுக்கே இடம் இல்லை என்றும் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாக தாகம்.