தேனி வீரபாண்டி ஸ்ரீகௌமாரியம்மன் கோயில் சித்திரை தேர் திருவிழாவை முன்னிட்டு மே 10ம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா உத்தரவிட்டுள்ளார். இந்த விடுமுறையை ஈடு செய்ய மே 25 முழு வேலை நாளாக செயல்படும் என அறிவிப்பு. மே 7ம் தேதி தொடங்கி 14ம் தேதி வரை சித்திரை திருவிழா நடைபெறும்.

அதற்காக இந்த மாதம் 17ம் தேதி கொடி கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கியது. முல்லைப் பெரியாறிலிருந்து கொடிக்கம்பம் ஊர்வலமாக வந்து திருக்கோயிலில் நடப்பட்டது.