கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது, மே தினத்தை முன்னிட்டு நாளை (திங்கட்கிழமை) கடலூர் மாவட்டத்தில் இருக்கும் அனைத்து அரசு மதுபான கடைகள், அரசு மதுபானக்கூடங்கள், எப்.எல்-2, எப்.எல்-3 பார்கள் திறக்க தடை விதிக்கப்படுகிறது. எனவே மே தினம் அன்று மதுபானங்களை விற்பனை செய்தால் சம்பந்தப்பட்ட கடை மேற்பார்வையாளர்கள், உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.