தமிழ்நாடு வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக நேற்று மின் நுகர்வு இருந்தது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் நேற்று முன்தினம் அதிகபட்சமாக 17,705 மெகாவாட் மின் நுகர்வு இருந்த நிலையில், நேற்று 17,749 மெகாவாட் மின்நுகர்வு இருந்தது என்று அவர் தெரிவித்துள்ளார்.

நேற்றைய மின் தேவை எந்த தடையும் இன்றி ஈடு செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் தற்போதைய மின்தேவை 16,500 மெகாவாட்டில் இருந்து 17,500 மெகாவாட் வரை இருக்கிறது. இது வருகிற ஏப்ரலில் மேலும் அதிகரித்து 17,000 மெகாவாட்டில் இருந்து 18,100 மெகாவாட்டாக உயரலாம் என மின்சார வாரியமானது தெரிவித்துள்ளது