இன்ஃப்ளூயன்சா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில் புதுச்சேரியில் மாணவர்கள் பாதுகாப்பு மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவலை தடுக்கும் வகையில் இன்று  முதல் மார்ச் 26 ஆம் தேதி வரை ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். காய்ச்சலால் பள்ளி தேர்வுகளை முன்கூட்டியே நடத்துவது பற்றி ஆலோசனை நடத்தப்படவில்லை எனவும் தெரிவித்தார். நேற்று 1 முதல் 9ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு ஒரு வாரத்திற்கு முன்னதாகவே அதாவது ஏப்ரல் 17 முதல் 24ஆம் தேதி வரை தேர்வு நடைபெறும் என செய்தி வெளியான நிலையில் தற்போது அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.