முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான மனோஜ் பாண்டியன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழுவில் எடப்பாடி பழனிச்சாமியை இடைக்கால பொதுச் செயலாளராக நியமித்தது, ஓ.பன்னீர்செல்வம் வைத்திலிங்கம் உள்ளிட்டவர்களை நீக்கியது போன்ற தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து இருந்தார்.

இந்நிலையில் பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் ஆதரவாளர் மனோஜ் பாண்டியன் தொடர்ந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று இபிஎஸ் உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். மீண்டும் ஒற்றைத் தலைமைக்கு மாறுவது தொண்டர்கள் மற்றும் பொதுக்குழுவின் விருப்பம். சட்ட விதிகளில் திருத்தம் செய்ய பொதுக்குழுவுக்கு மட்டுமே உள்ள அதிகாரத்தை கேள்வி எழுப்ப முடியாது எனவும் அந்த மனுவில் இபிஎஸ் குறிப்பிட்டுள்ளார்.