பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் தற்போது சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் பதான் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் ஜனவரி மாதம் 25-ம் தேதி இந்தியாவில் மட்டும் 8000 திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் தீபிகா படுகோனே, ஜான் ஆபிரகாம் போன்றோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்த நிலையில் பதான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் மழை பொழிந்து வருகிறது. அதன்படி  உலகளவில் 970 கோடிகளை வசூலித்துள்ளது.

இந்தியாவில் 500 கோடிகளுக்கு மேல் வசூலித்த முதல் இந்தி படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இதையடுத்து படக்குழுவினர் ஆஃபர் அறிவித்துள்ளனர். இன்று  இந்தியா முழுதும் ஐநாக்ஸ், பிவிஆர், சினிபோலிஸ் உள்ளிட்ட தியேட்டர்களில் டிக்கெட் விலை 110 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதற்கு ஷாருக்கான், பாப்கார்ன் இலவசமாக தர முடியுமா என கேட்டுள்ளார்.