சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் உடையார்பாளையம் பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரபு என்ற மகன் இருந்துள்ளார். இவர் வெல்டிங் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். பிரபுவுக்கு சசிகலா என்ற மனைவியும், இரண்டு மகள்களும் இருக்கின்றனர். இந்நிலையில் பிரபு குடும்ப செலவுக்காக சிலரிடம் கடன் வாங்கியதாக தெரிகிறது. ஆனால் வாங்கிய பணத்தை திரும்ப கொடுக்க இயலவில்லை.

மேலும் பணம் கொடுத்தவர்கள் அடிக்கடி தொந்தரவு செய்துள்ளனர். இதனால் மன உளைச்சலையில் இருந்த பிரபு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரபுவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.