நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கீழ்வேளூர் ஒன்றியம் எரவாஞ்சேரி ஊராட்சியில் எம்.எல்.ஏ தொகுதி மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ.14 லட்சத்து 59 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய ரேஷன் கடை ஒன்று கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கியுள்ளார். மேலும் நிகழ்ச்சியில் நாகை மாலி எம்.எல்,ஏ கலந்துகொண்டு ரேஷன் கடையை திறந்து வைத்துள்ளார். அதேபோல் ஊரக வளர்ச்சி துறை கூடுதல் கலெக்டர் பிரிதிவிராஜ் கீழ்வேளூர் ஒன்றிய தலைவர் வாசுகி நாகராஜன், கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் பன்னீர்செல்வம், வட்டார ஆத்மா குழு தலைவர் கோவிந்தராஜன், ஊராட்சி தலைவர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் அரசு துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

அதேபோல் கீழ்வேளூர் பேரூராட்சி சந்தை தோப்பு பகுதியில் எம்.எல்.ஏ தொகுதி மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ரேஷன் கடை திறப்பு விழா நடைபெற்றுள்ளது. இதில் நாகை மாலி  எம்.எல்.ஏ கலந்துகொண்டு ரேஷன் கடையை திறந்து வைத்துள்ளார். மேலும் திருவாரூர் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை பொது மேலாளர் காளிதாஸ், பேரூராட்சி தலைவர் இந்திரா காந்தி, பேரூராட்சி செயல் அலுவலர் குழு குகன், பேரூராட்சி கவுன்சிலர்கள் அரசு துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.