விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆனைகுளம் கிராமத்தில் சமுத்திரக்கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்த சமுத்திரக்கண்ணனுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனால் மன உளைச்சலில் இருந்த சமுத்திரக்கண்ணன் தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார்.

அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சமுத்திரக்கண்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.